இலங்கை
டயனா தாக்குதல் விசாரணைகள் நிறைவு
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான தாக்குதல் விவகாரம் குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகளுக்கு அமைய அதன் பரிந்துரைகள் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், டயனா கமகே முன்வைத்துள்ள தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் டயனா கமகே ஆகியோருக்கு இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றில் மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.