இலங்கை

யாழில் தனியார் விடுதியில் ஆணின் சடலம் மீட்பு

Published

on

யாழில் தனியார் விடுதியில் ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கொட்டடிப் பகுதியில் நேற்று (05.11.2023) இரவு இடம்பெற்றுள்ளது.

லால் பெரேரா என்கிற 61 வயதுடைய தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவரே உயிரிழந்துள்ளார்.

மூன்று நாட்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்த நிலையில் அறைக்கு வெளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version