tamilni 32 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 31 திகதி வரையிலான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 199 சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

மே மாதத்தை தவிர ஏனைய அனைத்து மாதங்களிலும் இந்த வருடம் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் வருகை 159 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதற்கமைவாக கடந்த மாதம் இந்தியாவிலிருந்து 28,222 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 10,629 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,454 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 7,548 சுற்றுலாப் பயணிகள் மற்றும் சீனாவிலிருந்து 6,211 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் அவுஸ்திரேலியா, மாலைத்தீவு, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 25 ஆயிரத்து 455 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...