இலங்கை
இரத்து செய்யப்பட்ட தொடருந்து சேவைகள்
இரத்து செய்யப்பட்ட தொடருந்து சேவைகள்
இலங்கையின் பல அலுவலக தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் தொடருந்து சேவைகள் இன்று(30.10.2023)இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக காலை மற்றும் மாலையில் இயங்கும் சுமார் 12 அலுவலக தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.