இந்தியா

இந்தியாவில் தரையிறக்கப்பட்ட இலங்கை விமானங்கள்

Published

on

இந்தியாவில் தரையிறக்கப்பட்ட இலங்கை விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.

ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 365 விமானமும், மாலைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 116 விமானமும் இந்தியாவில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சீரற்ற வானிலை காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களில் தரையிறங்க முடியாத நிலையில் விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version