அரசியல்

சஜித்தால் ஒன்றும் செய்ய முடியாது

Published

on

சஜித்தால் ஒன்றும் செய்ய முடியாது

சஜித் பிரேமதாசவால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நன்றாக உணர்ந்துவிட்டதால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார்.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர் அமோக வாக்குகளால் வெற்றியடைவார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிரணியில் உள்ள ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பார்கள்.” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version