இலங்கை

லங்கா ஐஓசி நிறுவன உரிமம் தொடர்பில் தகவல்

Published

on

லங்கா ஐஓசி நிறுவன உரிமம் தொடர்பில் தகவல்

லங்கா ஐஓசி நிறுவனத்தின் (LIOC) உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள இலங்கை அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான தீபக் தாஸ் கொழும்பிலுள்ள பங்குச் சந்தையின் தலைமை ஒழுங்குமுறை அதிகாரிக்கு எழுதிய கடிதத்திலே தெரியப்படுத்தி உள்ளார்.

அதன்படி, லங்கா ஐஓசியின் இலங்கையிலுள்ள உள்ளூர் விநியோக நிறுவனங்கள், இலங்கையில் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை மேலும் 20 ஆண்டுகளுக்கு தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட உரிமமானது அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version