இலங்கை

முருதவெல நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் அபாயம்

Published

on

முருதவெல நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் அபாயம்

அம்பாந்தோட்டை – முருதவெல நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, முருதவெல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் நேற்று(24.10.2023) இரவு முதல் திறக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக முருதவெல நீர்த்தேக்கத்திற்கு அருகே அமைந்துள்ள ஊருபொக்கு ஓயாவின் இருபுறமும் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version