இலங்கை

பொதுமக்களை சந்திக்காமல் சாக்குபோக்கும் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தரவு

Published

on

பொதுமக்களை சந்திக்காமல் சாக்குபோக்கும் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தரவு

பொதுமக்களை சந்திக்காமலிருக்கும் அரசியல்வாதிகளுக்கு அரச யந்திரம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

சந்திப்புகள் என்று கூறி அரச அதிகாரிகள் அடிக்கடி பொதுமக்களை சந்திப்பதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணையவழி சந்திப்புகளை மாத்திரம் நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக அரச உயர் அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இந்த உத்தரவு அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version