இலங்கை

காதல் விவகார தகராறில் ஒருவர் வெட்டிப் படுகொலை

Published

on

காதல் விவகார தகராறில் ஒருவர் வெட்டிப் படுகொலை

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறால் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இரத்தோட்டை – நிக்லோயாவத்த பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 39 வயதுடைய நபர் மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் 5 சந்தேகநபர்களை இரத்தோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் மகளுடன் ஏற்பட்ட காதல் காரணமாக மூண்ட மோதலால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version