இலங்கை

விவசாய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Published

on

விவசாய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு அடுத்த மாதம் முதல் வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இந்த வருடம் 58,770 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக செய்கை வறட்சி காரணமாக அழிவடைந்துள்ளது.

இதற்கமைய வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 53,965 ஆக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான இழப்பீடும் வழங்கப்படவுள்ளது.

Exit mobile version