இலங்கை

யாழில் பணியாற்றும் பெண் பொலிஸ் விபத்தில் பலி

Published

on

யாழில் பணியாற்றும் பெண் பொலிஸ் விபத்தில் பலி

யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் விடுமுறைக்காக வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 24 வயதான சாந்திமா ரணசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

அம்பேபூச – திருகோணமலை வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த யுவதி வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சமூக பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த தம்புள்ளையைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Exit mobile version