இலங்கை

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தை புறக்கணித்த சஜித்

Published

on

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தை புறக்கணித்த சஜித்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நிகழ்வில் கலந்து கொள்ளவிடாமல் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தடுத்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தான் மூன்றாவது தடவையாக பங்குபற்றியதாகக் கூறியதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், டபிள்யூ.எச்.எம். தர்மசேன மற்றும் கின்ஸ் நெல்சன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அரசாங்க தரப்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் காலங்களுக்குள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை நிகழ்வில் தாம் மூன்று தடவைகள் கலந்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் சர்வதேச நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தநிலையில் உலக வங்கி பிரதிநிதிகள் மற்றும் சமந்தா பவர் ஆகியோருடன் சந்திப்புகளில் அமர்வதற்கு தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

எனினும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியது போல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக தினசரி கொடுப்பனவு பயண கொடுப்பனவு எதையும் பெறவில்லை” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version