இலங்கை

மத்திய வங்கியின் அறிவிப்பு

Published

on

மத்திய வங்கியின் அறிவிப்பு

திறைசேரி உண்டியல்களை ஏலத்தில் விடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

ஒரு இலட்சத்து 10 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இவ்வாறு ஏலத்தில் விடப்படவுள்ளன.

ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி இந்த திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளன.

Exit mobile version