இலங்கை

ரணிலை கையாள்வதில் தடுமாறும் ஜூலி சங்

Published

on

ரணிலை கையாள்வதில் தடுமாறும் ஜூலி சங்

ரணில் விக்ரமசிங்கவை கையாள்வதில் அமெரிக்க, இந்திய அரசியலுக்கு ஒரு சங்கடம் இருப்பது உண்மை. ஏனென்றால் ரணில் விக்ரமசிங்க புத்திசாலி என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை சாதாரண அரசியல்வாதியாக பார்க்கமுடியாது. அவர் ஒரு இராஜதந்திரி. சிங்கள பௌத்த தேசிய அரசியலுக்கான, சிங்கள தேசியத்திற்கான மிக சிறந்த ஒரு இராஜதந்திரி என்றும் கூறினார்.

அந்த சிறந்த இராஜதந்திரியை கையாள்வதில் அமெரிக்க இந்திய தூதரகங்கள் சங்கடப்படுகின்றன என்பது உண்மை. அதன் காரணமாகத்தான் ராஜபக்சவைப் போன்றதொரு அல்லது வேறு ஒரு நபரை ஜனாதிபதியாக்குவதற்கு முற்பட்டிருக்கின்றார்கள். அது உண்மை என்றும் பத்திரிகையாளர் நிக்சன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version