இலங்கை

மட்டகளப்பில் மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவன்

Published

on

மட்டகளப்பில் மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவன்

மட்டகளப்பு-வாழைச்சேனை ஓட்டுமாவடியில் தனது மனைவியின் கழுத்தையும் கையையும் வெட்டி கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது 27.09.2023 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக குறித்த நபர் மனைவியின் கழுத்து மற்றும் கையை கூரிய ஆயுதத்தால் வெட்டியபோது அவர் பலத்தகாயங்களுடன் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் குறித்த வீட்டை முற்றுகையிட்டு படுகாயமடைந்த பெண்னை காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து அவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மனைவியை வெட்டிய 57 வயதுடைய கணவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Exit mobile version