இலங்கை

விடுதலையானதும் தனுஷ்க வெளியிட்டுள்ள தகவல்

Published

on

விடுதலையானதும் தனுஷ்க வெளியிட்டுள்ள தகவல்

கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்று இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று விடுவித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, வெளியே வந்த தனுஷ்க குணதிலக நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீதிபதியின் தீர்ப்பில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக, இன்று எனது சட்டத்தரணி முருகன் தங்கராஜ் இங்கு இல்லாவிட்டாலும் அவருக்கும் மற்ற வழக்கறிஞர்களுக்கும் மிக்க நன்றி.

எனது மேலாளர் எலீன் மற்றும் எனது பெற்றோர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிலர் அனைவரும் என்னை நம்பினார்கள். அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது. அதனால் இறுதியில் நீதிபதி சரியான முடிவை எடுத்தார்.

நான் சொன்னது போல் அந்த முடிவு எல்லாவற்றையும் சொல்கிறது. எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடும் வரை என்னால் காத்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version