இலங்கை

லண்டன் பல்கலைக்கழக கற்கைக்கு தெரிவான சாணக்கியன் உள்ளிட்ட இலங்கையின் சில எம்.பிக்கள்

Published

on

லண்டன் பல்கலைக்கழக கற்கைக்கு தெரிவான சாணக்கியன் உள்ளிட்ட இலங்கையின் சில எம்.பிக்கள்

லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகக் கற்கைக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் பல்கலைக்கழகத்தின் (UNIVERSITY OF LONDON) சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகக் கற்கையானது (Executive Course in Post-Legislative Scrutiny), நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பினும் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பானதாக அமைந்துள்ளது.

இந்த கற்கை நெறிகளின் நோக்கமானது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பினும் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை, அவற்றினை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதாகவே காணப்படுகிறது.

இந்த கற்கை நெறியில் உலக நாடுகளில் இருந்து பலர் பங்கு கொள்ளவுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து தானும், அங்கஜன் இராமநாதன் மற்றும் மகிந்த திசாநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளோம் என இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version