அரசியல்

ரணில் கொழும்பு திரும்பியதும் ஏற்படவுள்ள மாற்றம்

Published

on

ரணில் கொழும்பு திரும்பியதும் ஏற்படவுள்ள மாற்றம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி விக்ரமசிங்க கொழும்பு திரும்பியதும் சிறிய அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீக்குவது முக்கிய மாற்றங்களில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரபூர்வமான தரப்புக்களை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பை எதிர்கொண்டார்.

எனினும் ஆளும் கட்சியினரின் அதிக வாக்குகளால் அவர் தப்பிக்கொண்டார்.
இந்த நிலையில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அமைச்சர்களின் சில பணிகள் மாநில அமைச்சர்களின் கீழ் கொண்டு வரப்பட்டு அவை வர்த்தமானியில் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version