இலங்கை
தென்னிலங்கையில் திடீரென குலுங்கிய வீடுகள்
தென்னிலங்கையில் திடீரென குலுங்கிய வீடுகள்
அம்பலாந்தோட்டை பெரகம மஹஆர பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு 7.20 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திடீரென வீட்டின் உள்பகுதி பலத்த சத்தத்துடன் குலுங்கியது. வீட்டில் இருந்த சில ஓடுகள் தூக்கி வீசப்பட்டதாக அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறினார்.
அருகில் உள்ள பல வீடுகளுக்கும் இந்த சத்தம் கேட்டது. இது மிகக் குறுகிய காலத்தில் முடிந்து விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் வினவிய போது, அவ்வாறான நிலநடுக்கம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login