Connect with us

இலங்கை

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி!

Published

on

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி!

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி!

வங்கிகளிலுள்ள வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாக்கும் வகையில் காப்புறுதி திட்டமொன்று கட்டாயமாக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள வங்கிகளில் மக்கள் வைப்பிலிட்டுள்ள பணத்திற்கு ஆபத்து என பல தரப்பினரும் கூறிவந்த நிலையில் இந்த விடயம் சர்ச்சை நிலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், வங்கிகள் விசேட நியதிகள் சட்டமானது முழு நாட்டினதும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் இதன்மூலம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

முன்பு இல்லாத வகையில் பலமான சட்ட ஏற்பாடுகளை தயாரித்து அதனை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எமது நாட்டில் 5 கோடியே 72 இலட்சம் வங்கி வாடிக்கையாளர்கள் காணப்படுகின்றனர்.

அவர்களின் 15 டிரில்லியன் ரூபா நிதி வைப்பிலடப்பட்டுள்ளது. அந்த நிதி பாதுகாக்கப்பட வேண்டும். அதன் பாதுகாப்பு தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் முன்வைக்கப்பட்டன.

சில நிதி நிறுவனங்கள் பலவீனமடையும் போது வாடிக்கையாளர்கள் முகங்கொடுக்க நேரும் நிலையை நாம் கடந்த காலங்களில் அவதானித்துள்ளோம்.

அந்த வகையில் இப்புதிய சட்டத்தின் மூலம் நிதிநிறுவனங்கள் அவ்வாறு பலவீனமடையமானால் மத்திய வங்கியானது அதில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

முறையான வேலைத்திட்டத்தை மத்திய வங்கியால் அது தொடர்பில் முன்னெடுக்க முடியும். அந்தவகையில் அனைத்து வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாப்பதற்கு காப்புறுதியொன்று நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.

இந்தச் சட்டத்தின் மூலம் அதனை மேற்கொள்ள முடியும். வங்கி வாடிக்கையாளர்களும் அவர்கள் வைப்பிலிடும் பணமும் இதன்மூலம் பாதுகாக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்6 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை 14, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள அஸ்வினி சேர்ந்தவர்களுக்கு...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 24, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan\ இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2024, குரோதி வருடம் சித்திரை...

indraya rasipalan 2 indraya rasipalan 2
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan மேஷம்   மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதியான நாளாக இருக்கும்....

tamilnaadi 4 tamilnaadi 4
ஏனையவை1 வாரம் ago

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 20, 2024, குரோதி வருடம் சித்திரை...