இலங்கை
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று (13.07.2023) மீட்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை – வலஸ்முல்லை பிரதேசத்தில் வீதியோரத்தில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், வலஸ்முல்லை பிரதேசத்திலுள்ள மரக்கறி சந்தையொன்றில் உதவியாளராக பணியாற்றினார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் பாதாளக் குழுக்கள் செயற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: விபத்தில் பாடசாலை மாணவன் மரணம் - tamilnaadi.com