இலங்கை
யாழ்.மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!! அனுமதி இலவசம்!
யாழ்.மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!! அனுமதி இலவசம்!
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காராவின் ஏற்பாட்டில் தொழிற்சந்தை நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நிகழ்வின் இணைப்பாளர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு எதிர்வரும் 15 மற்றும் 16ம ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இம் மாதம் 15 மற்றும் 16 ம் திகதிகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவின் ஏற்பாட்டில் “வடக்கின் ஒளிமயம்” எனும் தொனிப்பொருளில் “Global fair 2023” நடைபெறவுள்ளது.
இரு தினங்களாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் இரவு 7 மணிமுதல் 12 மணிவரை இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.
அனைத்து பார்வையாளர்களுக்குமான அனுமதி இலவசமாக காணப்படும்.
இதில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தொடர்பான ஆலோசனைகள், சந்தர்ப்பங்கள் காணப்படுவதால் வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் பயன்பெறலாம்.
வெளிநாட்டு தொழில்களின் போதான பிரச்சினைக்கு தீர்வு காணும் அமைச்சு , ஊழியர் சேமலாப , நம்பிக்கை நிதியப் பிரச்சினைக்கான தீர்வுகளுடன் தொடர்பான அமைச்சு , தொழிற்துறை சம்பந்தமான வாய்ப்புக்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான அமைச்சு மற்றும் பயிற்சிக்கான அமைப்புக்கள் இத்தொழில் வாய்ப்பு சந்தையில் பங்கெடுக்கின்றன.”என தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login