இலங்கை
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் சுமார் 61,183 பேர் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் , இம்மாதம் 87,521 சர்வதேச பார்வையாளர்களைக் கவர்ந்திழுப்பதை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டிருந்த நிலையில், இலங்கை தனது இலக்கில் 70 சதவீதத்தை அடைந்துள்ளது.
அந்தவகையில் இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகை சராசரியாக 3,059 ஆக இருந்துள்ளது.
முதல் வாரத்தில், 19,365 சுற்றுலாப் பயணிகளும், 2 ஆவது வாரத்தில் 20,541 சுற்றுலாப் பயணிகளும், 3 ஆவது வாரத்தில் 20,986 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
அத்துடன், இலங்கைக்கு வருகை தரும் நாட்டவர்களில் இந்தியா முதல் இடத்திலும், ரஷ்யா 2 ஆவது இடத்திலும், ஐக்கிய அரபு இராச்சியம் 3 ஆவது இடத்திலும், அவுஸ்திரேலியா 4 ஆவது இடத்திலும், சீனா 5 ஆவது இடத்திலும் உள்ளது.
அதே சமயம் கனடா, ஜேர்மனி, அமெரிக்கா, மாலத்தீவுகள் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login