இலங்கை
அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை
அரசாங்கம் தொடர்ச்சியாகப் பொறுப்புக்கூறலைத் தவிர்த்துவருகின்ற நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கை ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அதனை நாம் வரவேற்கிறோம் என்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அரசாங்கம் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான அழுத்தத்தினை ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வலுவாக பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வாய்மொழிமூல அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அது குறித்து கருத்து வெளியிடும் போதே தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login