இலங்கை
அரசாங்க நிவாரணங்களை விற்று சூதாட்டம்!
அரசாங்க நிவாரணங்களை விற்று சூதாட்டம்!
அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை விற்பனை செய்து அந்தப் பணத்தைக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆதிவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலனறுவை மாவட்டம், தலுகான ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆதிவாசிகள், வெசாக் பெளர்ணமி தினமன்று இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் பெண்கள் என மானம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது சிலர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
You must be logged in to post a comment Login