இலங்கை
பொருளாதாரப் பிரச்சினை – வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!
பொருளாதாரப் பிரச்சினை – வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!
குடும்பப் பொருளாதாரப் பிரச்சினையை காரணமாக காட்டி மூன்று சிறார்கள் வேலை தேடி வீடுகளை விட்டு ஓடியுள்ளதாக வென்னப்புவ தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீடுகளை விட்டு ஓடிய இந்த மூன்று மாணவர்களும் 14-15 வயதுடைய வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றனர்.
இவர்களின் பெற்றோர் கூலித்தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகிறது.
மாணவர்களில் ஒருவர், சில நாட்களுக்கு முன், தனது வளர்ப்புத் தாயிடம், பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வருவதால், வேலை தேட விரும்புவதாக, கூறியதாக, பொலிசார் தெரிவித்தனர்.
மற்ற இரண்டு மாணவர்களும் இசை நிகழ்ச்சியைக் காணச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிசார் தெரிவித்தனர்.
வேலை தேடி வருவதாக கூறிய மாணவனையும், அவனது நண்பர்கள் இருவரையும் வீடுகளை விட்டு விரட்டியடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் இருவருக்கு வேலை கிடைத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.குறித்த பாடசாலை மாணவர்கள் மூவரும் கடந்த 14ஆம் திகதி வீடுகளை விட்டு ஓடிய நிலையில், அவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
You must be logged in to post a comment Login