அரசியல்
கடற்படைத்தள புலனாய்வாளர் சடலம் மீட்பு!
முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றும் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளையினை சேர்ந்த குறித்த கடற்படை வீரர் முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் 15.04.23 அன்று இரவு நித்திரைக்கு சென்ற நிலையில் 16.04.23 காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment Login