அரசியல்
2025ம் ஆண்டே தேர்தல்!!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்படலாமென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி, தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேர்தல் சட்டம், அரசியலமைப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவு ஆகிய எதனையும் கருத்திற்கொள்ளாது அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இருப்பதறகான நடவடிக்கையை மேற்கொண்டு செல்வதையே காணக்கூடியதாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login