இலங்கை
குளத்திலிருந்து சடலம் மீட்பு!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளமொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 50 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இன்றைய தினம் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login