இலங்கை
கொழும்பில் நீர் வழங்கலில் சிக்கல்!
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (09) மதியம் 12 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 01,02,03,04,07,08,09,10 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை,மேற்படி பிரதேசங்களின் உயரமான பகுதிகளில் நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொலன்னாவ பகுதியில் உள்ள அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகிக்கும் குழாய் உடைந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த குழாயின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீர் விநியோகம் சீர்செய்யப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login