இலங்கை
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு!
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூ.ஆர். கோட்டா முறைமைக்கு இணங்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் லிமிடெட் ஆகியவற்றின் முகாமைத்துவம் மற்றும் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை (06) காலை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்ச்சியாக கியூஆர் கோட்டா முறைமையை கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் 50 சதவீத எரிபொருள் தாங்கி கொள்ளளவை பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் பௌசர்களுக்கும் ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்படும் என்றும் அதற்கு பின்னர், அனைத்து தனியார் பௌசர்களுக்கும் ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும் என்றார்.
இதேவேளை, 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login