Connect with us

அரசியல்

அரசாங்கத்தை பொது மேடைகளில் கூட விமர்சிக்க முடியாது!!

Published

on

WhatsApp Image 2023 04 05 at 7.23.08 PM
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆக கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள்.  தங்களுடைய உரிமைகளை கேட்ட ஒரே காரணத்துக்காக தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் போராடியதற்காக, ஹலோ இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தமது வாழ்வினை இழந்துள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இதை விட பாரதூரமானது.  இதனால் பலர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ள முடியாது தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்ள முடியாது நியாயமான தீர்வு கோரி போராட்டம் செய்ய முடியாது.
பொதுவாக அரசாங்கத்தை பொது மேடைகளில் கூட விமர்சிக்க முடியாது இந்த சட்டத்தின் கீழ்.இவ்வாறு தெரிவித்தார் புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி கா செந்தில்வேல்.
யாழ்ப்பாணத்தில் அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
ஆரம்பத்தில் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலங்கள் 10 ,15 ,20 வருடங்கள், சிறையில் இருந்தவர்கள் கூட தற்பொழுதும் உள்ளனர்.
அவர்களின் விடுதலைக்காக இந்த நாட்டில் உண்மையாக ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைத்து சக்திகளும் கடந்த காலத்தில் போராடி வந்திருக்கின்றோம்.
அந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான் படிப்படியாக காலத்துக்கு காலம் , பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களும் வயதானவர்களும் விடுதலை செய்யப்பட்டு வந்து இன்னும் சிலர் குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இந்த அநியாயம் மோசமான நிலைமை மாறுவதற்கு முன்பே அதே பயங்கரவாத தடை சட்டத்தை போன்ற , இன்னும் அதைவிட ஒரு மோசமான சட்டத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு முன் வந்திருக்கின்றமை தான்  மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதனை எதிர்த்து மக்கள் போராட வேண்டும். மக்கள் அந்த நிலைமைக்கு தற்பொழுது தள்ளப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்திலே எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளனர்.
வெளியில் தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
மாணவர் இயக்கங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
எங்களைப் போன்ற இடதுசாரி கட்சிகளும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வருமாக இருந்தால் , ஏற்கனவே 44 வருடங்கள் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை விட இன்னும் மோசமான சட்டமாக இது வரும்  என்ற அபாயத்தை நாங்கள் தெரிவிக்க விரும்புகின்றோம்.
இந்தச் சட்டம் இவர்கள் இதுவரை முன்மொழிக்கப்பட்ட இந்த சட்டத்தில் இருக்கின்ற விடயங்களை பார்க்கின்ற பொழுது , சாதாரணமாக கூட்டம் கூடினால் கூட , ஒரு கூட்டத்தில் அரசாங்கத்தை எதிர்த்து பேசினால் கூட ,  அது பயங்கரவாதமாக கருதப்பட்டு அதன் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது , தொழிற்சங்கங்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராட முடியாது.  வேலை நிறுத்தங்களை செய்ய முடியாது.  பகீஸ்கரிப்புகளை செய்ய முடியாது.
ஞாயம் கேட்கின்ற தொழிற்சங்கங்கள் மாணவர்களை இந்த தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து அடைக்கக் கூடிய ஒரு அபாயகரமான சூழல் எதிர்காலத்தில் வளரப்போகின்றது.
எனவே தான் இந்த சட்டம் கொண்டுவரக் கூடாது.   பாராளுமன்றத்துக்கு கொண்டு வரக்கூடாது என்ற மக்கள் இயக்கம் , குறிப்பாக நாடு முழுவதும் தென்னிலங்கையில் இருக்கக்கூடிய தொழிற்சங்கங்களும் இடதுசாரி அமைப்புகளும், முற்போக்கு சக்திகளும் , ஜனநாயக சக்திகளும் கையில் எடுத்திருக்கக் கூடிய சூழலை நாங்கள் பார்க்கின்றோம்.
#srilankaNews
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...