இலங்கை
IMF இடமிருந்து மேலும் 7 பில்லியன் டொலர்
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு 7 பில்லியன் டொலர் கடன் கிடைக்கவுள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைத்தன் பின்னர் சர்வதேச நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் மற்றும் நன்கொடையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்பு முகவர் நிறுவனங்கள் மீண்டும் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தெளிவான அடையாளத்தை வழங்கும் என்றும் அறியமுடிகிறது.
அதற்கிணங்க, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை விரைவில் கடன்களை அனுமதிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஈடுபாடு இலங்கையுடனான தமது ஒத்துழைப்பை மீளத் தொடங்குவதற்கு ஏனைய முகவர் நிலையங்கள் மற்றும் நாட்டுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
You must be logged in to post a comment Login