இலங்கை
லிஸ்டீரியோசிஸ் தொற்று நோயா? – தொற்று நோய் தடுப்பு பிரிவு விளக்கம்

லிஸ்டீரியோசிஸ் தொற்று நோய் நாட்டில் இல்லை எனவும் அது குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை எனவும் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
லிஸ்டீரியா மொனோசைட்டஜன் பக்றீறியா தொற்றால் ஏற்படும் இந்த நோயால் சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிக்கை விடுத்து குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
சிவனொளிபாத மலைக்கு சென்ற மேலும் இருவர் உயிரிழந்தமையை அடுத்து இந்த நோய் குறித்த கருத்தாடல் அதிகரித்தது. எனினும் அவர்களது உயிரிழப்புக்கு லிஸ்டீரியாவால் ஏற்பட்டமை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
மரண பரிசோதனைகளின் போது பெறப்பட்ட மாதிரிகளில் தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login