இலங்கை
தாய்மொழியில் பரீட்சை எழுத நடவடிக்கை!
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய்மொழியில் (சிங்கள/தமிழ்) பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டக்கல்லூரியின் அபிவிருத்திக்காக தாம் செயல்பட்டு வருவதாகவும், சட்டக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login