இலங்கை
சுற்றிவளைப்பு நடவடிக்கை – 35 பேர் கைது
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 நபர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (15) நள்ளிரவு 11.00 மணி தொடக்கம் இன்று (16) அதிகாலை 1.00 மணி வரை சுமார் 30 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இரண்டு மணிநேரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த நடவடிக்கையில் கஞ்சா விற்பனையாளர்கள், பாவனையாளர்கள், திருடர்கள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் 18 பேர் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த இரண்டு மணித்தியாலங்களுக்குள் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 நபர்களையும் பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றில் ஆஜராகாத 7 சந்தேக நபர்களையும் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment Login