அரசியல்
வீதியில் இறங்கத் தயார்!!
மக்களின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை தற்போதைய அரசாங்கம் பறித்துள்ளமைக்கு எதிராக தாம் வீதியில் இறங்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேர்தலை நடத்தக் கோரி மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான அரச பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த நிவிதிகல நிமல் அமரசிறிக்கு குளியாப்பிட்டியவில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்தார்.
தனது அரசியல் சித்தாந்தம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் பல்வேறு மாற்று அபிப்பிராயங்கள் காணப்படுகின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்க்கட்சியில் செயற்படும் சகோதர அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னனி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதலை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
மிருகத்தனமான,சர்வாதிகார,எதோச்சதிகார அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலைக்கு ஜனாதிபதியும் அமைச்சரவையும் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
ஜஜனநாயகத்தைக் கோரி வீதியில் இறங்கிய நிமல் அமரசிறி மீதான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை ஒரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்திகண்டிப்பதாகவும், இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி தேர்தலைக் கோரி மக்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக ஏகமானதாக ஒன்றுபடுவதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் தேர்தலுக்கு பணம் இல்லை எனவும், பணம் வழங்க முடியாது எனவும், பணம்இருந்தாலும் தேர்தலை நடத்த முடியாது என்று கூறினாலும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி வேட்புமனுதாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷவை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களின் அதிகாரத்தை தம்மிடம் பெற்று நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login