அரசியல்
கண்ணீர் புகையால் எம்மை தோற்கடிக்க முடியாது!!
உள்ளூராட்சி தேர்தலிற்கான போராட்டத்தில் எந்த வழிமுறையையும் பயன்படுத்தி வெற்றிபெறுவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
லிப்டன் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கருத்து வெளியிட்ட அவர், உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கத்தை நடத்தச் செய்வதற்கான போராட்டத்தை கண்ணீர் புகைபிரயோகத்தின் மூலம் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தலை ஒருமாதத்திற்கோ அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கோ ஒத்திவைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முடியாது. மேலும் அதிகளவான பொதுமக்கள் எங்களுடன் இணைந்துகொள்வார்கள் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login