அரசியல்
தேர்தலை நடத்த நிதி இல்லை!!
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் சட்டரீதியில் திகதி குறிக்கப்படவில்லை. தேர்தலை நடத்த நிதி இல்லை. எனினும், நாங்கள் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்போம். தேர்தல் நடத்த நிதி இல்லை. நிதி கிடைத்தாலே தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவுக்குள் ஒற்றுமை இல்லை. இருவர் இணைந்து தீர்மானத்தை எடுத்துவிட்டு. அதற்கான அனுமதியை ஏனைய உறுப்பினர்களிடம் பெற்றுக்கொண்டனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login