அரசியல்
மார்ச் 9 ஆம் திகதி தேர்தல் இல்லை!!
தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம் மார்ச் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று(24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login