இலங்கை
அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!
நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகளின் கையிருப்பு தீர்ந்துவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையின் கீழ், தேசிய வைத்தியசாலை முதல் கிராமிய வைத்தியசாலைகள் வரையிலான முழு வைத்தியசாலை அமைப்பின் சுகாதார சேவைகளைப் பராமரிப்பது பாரிய சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய கடன் உதவி முறையின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்படும் 80% மருந்துகள் பதிவு செய்யப்படவில்லை என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதற்கு மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவெ பொறுப்பு கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login