இலங்கை
இலங்கைக்கு நிதி உத்தரவாதம் – பாரிஸ் கிளப் அதிரடி
இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை ஆதரிப்பதற்காக பாரிஸ் கிளப் கடன் வழங்குநர்கள் நிதி உத்தரவாதங்களை வழங்கியுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சவூதிஅரேபியா மற்றும் இந்தியாவும் நிதி உத்தரவாதங்களை வழங்குவதற்கு தங்கள் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் தெரிவித்துள்ளன.
நாணய நிதியத்தின் திட்ட அளவுருக்களுக்கு இணங்க, சீனா உட்பட மற்ற அதிகாரப்பூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களையும் பாரிஸ் கிளப் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login