அரசியல்
ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்!!
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை பதவி விலகுமாறு மிரட்டி மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டுக்கு நேற்று இரவு தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மற்றோர் உறுப்பினர் எஸ்.பி.திவரத்னவுக்கு நேற்று மீண்டும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவில் இருந்து இராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்யப் போவதாக உறுப்பினர்களான கே.பி.பி. பத்திரண மற்றும் எஸ்.பி.திவரத்னவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததை அடுத்து, அந்த இரு உறுப்பினர்களின் வீடுகளுக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எம்.எம்.மொஹமட்டுக்கு மிரட்டல் அழைப்பு வந்த நேரத்தில் எஸ்.பி. திவரத்னவுக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல் குறுஞ்செய்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment Login