அரசியல்
இராஜினமா கடிதத்தை ஏற்கவில்லை?
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ளஸின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடந்த 25ஆம் திகதியன்று பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் அந்த இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தீர்மானிப்பார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
You must be logged in to post a comment Login