இலங்கை
காற்றுடன் கூடிய மழை!!


தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதால் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கையை கடக்க வாய்ப்புள்ளது.
இதன்காரணமாக, இன்றும் (24) அடுத்து வரும் சில நாட்களும் நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.