இலங்கை
கலால் திணைக்கள சுற்றிவளைப்பு! – 31,342 பேர் கைது
இலங்கை கலால் திணைக்களம் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் 2022 நவம்பர் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 31,342 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்புக்களின் போது, குறித்த குற்றங்களுக்காக 31,342 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 4,559 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இந்தச் சுற்றிவளைப்புக்களின் போது கைப்பற்றப்பட்ட வழக்குப் பொருட்களின் மொத்தப் பெறுமதி 350 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றத்தினால்118 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login