இலங்கை
சுற்றுலாவிகளுக்கு யால பூங்காவில் இளைப்பாறும் இடம்!
யால தேசிய பூங்காவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பகல் வேளையில் ஓய்வெடுப்பதற்காக தனியான இளைப்பாறும் இடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வன விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இந்த ஓய்விடத்தை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் என்பனவும் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கு வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கான நிகழ்ச்சி நிரல்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் செலவிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள தொகை 56 மில்லியன் ரூபாவாகும்.
இங்கு சுமார் 200 வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login