இலங்கை
ATM – இல் பணம் திருட்டு! – பம்பலப்பிட்டியில் ஒருவர் கைது
பம்பலப்பிட்டியில் உள்ள ATM இயந்திரமொன்றிலிருந்து 400,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் 10 ATM அட்டைகளுடன் வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ATM அருகே இருந்த சிசிடிவி கெமராவில் பதிவான காட்சிகள் மூலம் சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
தொம்பே பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் டிசம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login