இலங்கை
இரசாயனப் பதார்த்தங்கள் பற்றாக்குறை! – இரத்தப் பரிசோதனை நிறுத்தம்
லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனியார் ஆய்வகங்களில் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு நோயாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரசாயனப் பதார்த்தங்களின் பற்றாக்குறையால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எனினும், இரசாயனப் பதார்த்தங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் வைத்தியசாலை அமைப்பு வீழ்ச்சியடையாது என காசல் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login